×

எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78,000 பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், வருகிற ஜூலை இரண்டாவது வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நாளை காலை 10 மணி முதல் வருகிற ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : MPPS ,BTS ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட்...