பழநி:பழநி கான்வெனட் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் மாலை நேரக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை கல்லூரி அலுவலர்கள் வழக்கம்போல் கல்லூரி கட்டிடத்தை திறந்துள்ளனர். அப்போது கட்டிடத்தின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதுகுறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post பணம் திருட்டு appeared first on Dinakaran.