×

மயங்கிக் கிடந்தவர் சாவு

ஈரோடு: ஈரோடு காரை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள பெந்தகோஸ் சர்ச் அருகில், கடந்த 23ம் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிக் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவர், யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எனும் விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து, ஈரோடு டவுன் வி.ஏ.ஓ. சதீஷ்குமார் நேற்று முன் தினம் அளித்த புகாரின்பேரில், ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மயங்கிக் கிடந்தவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Pentagos Church ,Erode Karai Canal ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு