×

செக்கானூரணி அருகே கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம்

மதுரை, ஜூன் 27: மதுரையை அடுத்த செக்கானூரணி அருகே உள்ளது தேங்கில்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘‘எங்கள் கிராமத்திற்கு என தனி மயானம் உள்ளது. இக்கிராமத்தில் இறந்தவர்களுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி இறுதிச்சடங்குகள் செய்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது நடந்தால், பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படும். எனவே, அந்த மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். இப்பிரச்னை தொடர்பாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

The post செக்கானூரணி அருகே கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chekanurani ,Madurai ,Thengilpatti ,Sekanurani ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை