×

பெண் தற்கொலை

 

கோவை, ஜூன் 26: கோவை கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (40). டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர். இவரது மனைவி சுகன்யா (35). கணவர், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த சுகன்யா தனது அறைக்கதவை பூட்டி கொண்டார். தயாளன் நீண்ட நேரம் கதவை தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தயாளன் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுகன்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dayalan ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...