×

பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது தொழிலாளி கொலை: 50 வயது பெண் கைது

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் லெனின்(40). கூலி தொழிலாளி. வேலைக்கு செல்லாமல், மது குடித்து விட்டு ஊரில் தகராறு செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரது மனைவி காவேரி (50). கணவர் இறந்து விட்டதால் விவசாய கூலி வேலை செய்து தனியாக வசிக்கிறார். நேற்று மாலை, குடிபோதையில் அவரது வீட்டுக்கு சென்ற லெனின், காவேரியை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த காவேரி, கட்டில் காலால், லெனின் மண்டையில் ஓங்கி அடித்தார்.

இதில் அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அப்பகுதியினர் வந்து அவரை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்தார். இதனிடையே, காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் காவேரி சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது தொழிலாளி கொலை: 50 வயது பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Kauverivattanam ,Lenin ,Karipuram ,Krishnagiri District ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி