×

விருத்தாசலம் அருகே சூதாடிய 2 பேர் கைது

வேப்பூர், ஜூன் 25: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஐயனார் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று விளாங்காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தியம் கிராமத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தியம் கிராமத்திற்கு சென்றபோது அங்கு பச்சமுத்து மகன் சுப்ரமணியன்(35), சுப்ரமணியன் மகன் வீராசாமி(43) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post விருத்தாசலம் அருகே சூதாடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Veypur ,Vriddhachalam ,Sub-Inspector ,Iyanar ,Velangatur ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி