மாஸ்கோ: ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தேச துரோகிகள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். தேச துரோகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்னர் ஆயுதக் குழுவினரின் கிளர்ச்சியால் மாஸ்கோவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தேச துரோகிகள்: ரஷ்ய அதிபர் புதின் பேச்சு appeared first on Dinakaran.