×

மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

 

திருப்பூர், ஜூன் 24: திருப்பூர், பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (21). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவர் 17 வயதுடைய 12ம் வகுப்பு படித்த பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 02.03.2022 அன்று திருப்பூரில் இருந்து வெளியூருக்கு அழைத்துச் சென்றார். பஸ்சில் சென்றபோது மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றவாளியான பாஸ்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Bhaskar ,Bharappalayam, Tirupur ,Banyan Company ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்