×

மதிமுக கையெழுத்து இயக்கம்

 

மாமல்லபுரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, மாமல்லபுரத்தில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அனைத்து வகையிலும் மக்களுக்கு விரோதமான நடவடிக்கை எடுப்பதோடு, தனி ஆதிக்கத்தை செலுத்தி தமிழக அரசுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆளுநரை பதவி நீக்கக் கோரி குடியரசு தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் மாமல்லபுரத்தில் கோவளம் சாலையில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு, மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கி, முதல் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், மாமல்லபுரம் பேரூர் செயலாளர் பாபு, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் லோகு, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த பீர்முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

The post மதிமுக கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Mamallapuram ,Madhimuk ,Governor RN ,Ravi ,MDMK Signature Movement ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...