- மெங்
- வங்கம்
- முதல் அமைச்சர்
- கொல்கத்தா
- முன்னாள்
- மேற்கு வங்கம்
- புத்ததேவ் பட்டாச்சார்யா
- சுஷேதனா
- முதலமைச்சர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா. இவரது மகள் சுசேதனாவிற்கு 41வயதாகிறது. இவர் சமீபத்தில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில் சுசேதனா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து சுசேதனா கூறுகையில், ‘‘இளமைபருவத்தில் இருந்தே என்னை பெண்ணாக கருதாமல் ஆணாக கருதியதால் அடிக்கடி அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். இப்போது என்னை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் போருக்கு தயாராக இருக்கிறேன். எனது முடிவுக்கு தந்தை புத்ததேவ் பட்டார்ச்சர்யா எப்போதுமே ஆதரவாக இருந்துள்ளார். எனது தாயும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை விரைவில் செய்து கொள்ள இருக்கிறேன். சமூக ஊடகங்களில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பெயர் மாற்றம் மற்றும் பாலின மாற்றம் குறித்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நடைபெறும்” என்றார்.
The post மே.வங்க முன்னாள் முதல்வரின் மகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.