×

பஸ் மோதி தொழிலாளி பலி

 

நத்தம், ஜூன் 23:நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (40). கூலித்தொழிலாளியான இவர் சொந்த வேலையாக இரு தினங்களுக்கு முன் உலுப்பகுடி சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற அவர் மீது, திண்டுக்கல்லில் இருந்து வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை நத்தம் போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பிரபு நேற்று இறந்தார். விபத்து தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Nattam ,Satish ,Moongilpatti ,Dinakaran ,
× RELATED நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்