×

பணிகளை விரைந்து முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: ஆலந்தூர் மண்டல தலைவர் எச்சரிக்கை

ஆலந்தூர்: தூர் மண்டலத்திற்குட்பட்ட நந்தம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் திட்டபணி, பாதாள சாக்கடை போன்ற பணிகள் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களை வைத்து அவரசக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழு தலைவர் சந்திரன், மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது.
இதில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் கூடுதல் பணியாளர்களை வைத்து பணிகளை முடிக்கும்படியும், பொதுமக்களுக்கு தற்காலிக பாதை அமைத்து போக்குவரத்துக்கு வழிசெய்து தரும்படியும், பணிகளை விரைந்து முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மண்டலக்குழு தலைவர் சந்திரன் எச்சரித்தார்.

The post பணிகளை விரைந்து முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: ஆலந்தூர் மண்டல தலைவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alandur ,Nandambakkam ,Manapakkam ,Mughalivakkam ,Dinakaran ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...