×

எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் சாவு

 

ஈரோடு, ஜூன் 23: ஈரோடு, வெண்டிபாளையம், மணலி கந்தசாமி வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் ஆனந்தகுமார் (27). இவருக்கு திருமணமாகவில்லை. மேலும் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவர், கடந்த 19ம் தேதி இரவு மதுபோதையில் சிக்கன் பிரியாணியை வீட்டுக்கு வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து இரவு 11 மணியளவில் ஆனந்தகுமார் வாந்தி எடுத்துள்ளார்.

அதுகுறித்து, வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது தனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை என்றும், அதனால், எலி பேஸ்ட்டை தின்று விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Arumugam ,Manali Kandasamy Road, Vendipalayam, Erode ,Anandakumar ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்