×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தான் முன்னான் பிரதமர் இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி தலைவருமானவர் இம்ரான்கான். இவர், அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார். இவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் ஒரு வழக்கு தொடர்பாக இம்ரான்கான் நீதிமன்றத்துக்கு வந்தபோது, அவரை துணை ராணுவம் கைது செய்தது. இதனால் நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,PM ,Imran Khan ,Lahore ,Tehreek-e-Insaf ,PTI ,Dinakaran ,
× RELATED இம்ரான் கான் மீது புதிய வழக்கு