×

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 புது பேட்ஸ்மேன், பவுலர்களை தேர்வு செய்ய வேண்டும்: மஞ்ச்ரேக்கர் சொல்கிறார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒன்டே மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் அணியில் புதிய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவேணடும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ஆஸ்திரேலிய அணியை பார்த்தால் ஸ்டீத், டிராவிஸ் ஹெட் டி.20 போட்டியை அதிகம் ஆடுவதில்லை. இதுபோன்ற அணுகுமுறையை நாம் கடைப்பிடிககவேண்டும். ஐபிஎல் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரை, முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். குறைந்தது 3 புதிய பேட்ஸ்மேன், 3 புதிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எதிர்கால டெஸ்ட் வீரர்களாகவும், வெளிநாட்டுச் சூழல்களில் வெற்றி பெற தகுதியுள்ள வீரர்களை கண்டறிய வேண்டும். பேட்டிங் என்று வரும்போது முதல் தர போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களை மட்டும் பார்க்க வேண்டும். நமது உள்நாட்டு கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனித்தால், நம்பர் 3, 4, 5 ஆகிய வீரர்களை நீங்கள் காணலாம். பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா மற்றும் சில இளைஞர்களுக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு இந்தியாவின் வேக பேட்டரி மெலிதாகத் தெரிகிறது. முகமது சிராஜ், முகமது ஷமி மீது அதிக சுமை உள்ளது. உமேஷ் யாதவ் பயணம் முடிந்துவிட்டதாக தெரிகிறது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு, இந்தியா ஒரு புதிய வரிசையை உருவாக்க வேண்டும். டெஸ்ட் வீரர்களைத் தேட வேண்டும். யாராவது காயம் அடைந்தால், மாற்று வீரர்கள் தயாராக இருக்க வேண்டும், என்றார்.

The post வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 புது பேட்ஸ்மேன், பவுலர்களை தேர்வு செய்ய வேண்டும்: மஞ்ச்ரேக்கர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Manjrekar ,Mumbai ,cricket ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...