×

ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் படித்து டாப் 10 இடங்களை பிடித்தது எப்படி? நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் பேட்டி

சென்னை, ஜூன் 22: ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் படித்து டாப் 10 இடங்களை பிடித்தது எப்படி என நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் தங்கள் அனுபவங்கள் குறித்து கூறினர். 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில், ஆகாஷ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 145 மாணவர்கள் 700க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர். அவர்களில் 109 பேர் ஆகாஷ் பயிற்சி மையத்தின் நேரடி வகுப்புகளில் பயிற்சி பெற்றவர்கள். மேலும் 57 மாணவர்கள் நீட் தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். இவர்களில் 30 பேர் முதல் 50 இடங்களை பிடித்துள்ளனர். குறிப்பாக, சூர்யா சித்தார்த் (அகில இந்திய ரேங்க் 6) மற்றும் ஸ்வயம் சக்தி (அகில இந்திய ரேங்க் 8) ஆகிய இருவரும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வில் சிறந்த மாணவர்களாக உருவாகியுள்ளனர். அவர்களின் பயணம், அவர்களின் அனுபவம் மற்றும் பயிற்சியிடையே அவர்கள் பெற்ற மதிப்புமிக்க நுண்ணறிவுகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. மேலும் சில மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பேட்டி வருமாறு: மாணவன் கவுஸ்தவ்: நான் 9ம் வகுப்பில் படிக்கும் போது அறிவியலில், குறிப்பாக உயிரியலில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. மனித உடலைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளும் போது, அந்த பாடத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டாகி ஈர்க்கப்பட்டேன். நீட் தேர்வுக்கு தயாராக முடிவு செய்த பிறகு ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று முடிவு எடுக்க காரணம், அதன் சாதனைகள் குறித்த பதிவுகளை கேள்விப்பட்டேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தை பரிந்துரை செய்தனர். அங்குள்ள ஆசிரியர்களும் நான் எடுத்த முடிவுக்கு மற்றொரு காரணம். ஆகாஷ் கல்வி நிறுவனம் ஒரு ஆதரவான சூழ்நிலையை எனக்கு வழங்கியதுடன், நீட் தேர்வுகளில் உள்ள பிரச்னைகளில் இருந்து எங்களை விடுவித்தது. எங்களிடம் உள்ள குறைகளை நீக்கி வலுப்படுத்த, ஆசிரியர்களிடம் நேரடியாக பேச வைத்து, சந்தேகங்களை போக்கினர். நீட் தேர்வுகளில் உள்ள பெரிய அளவிலான பிரச்னைகளில் இருந்து அது எங்களை விடுவித்தது. அதனால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற உதவியது.

நீட் தேர்வில் ஆர்வமுள்ளவர்களுக்கான அறிவுரைகளை பொறுத்தவரையில், முதலில் ஆர்வத்தோடு இருப்பது முக்கியம். மற்றும் உங்கள் இலக்கை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும். என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை பலமுறை முழுமையாக படித்து, மாதிரி தேர்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு மாதிரி தேர்வுக்கு பிறகும் அதில் நீங்கள் செய்துள்ள பிழைகளை ஆய்வு செய்து, அதில் இருந்து கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் அதுபோன்ற பிழைகள் மீண்டும் நிகழாமல் இருக்க பேப்பர் பிரசன்டேஷன் அமர்வுகளில் பங்கேற்க வேண்டும்.

மாணவன் துருவ்: நீட் தேர்வில் கர்நாடகாவில் முதலிடம் பிடித்து அகில இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளேன். என்னால் இன்னும் அதை நம்ப முடியவில்லை. இது எனது கனவு, அது நனவாகியுள்ளது. நான் இரண்டு வருடங்களாக அயராது உழைத்தேன். இந்த சாதனை எனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. என் தாயாரின் நண்பரின் பரிந்துரையின் பேரில் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். நாங்கள் ஒரு முறை ஆகாஷ் கல்வி நிறுவனத்துக்கு சென்றோம். அங்குள்ள கட்டமைக்கப்பட்ட ஆய்வு தொகுப்புகள் மற்றும் விரிவான புத்தகங்கள் என்னை ஈர்த்தது. வகுப்பறை அனுபவம் மேலும் என்னை கவர்ந்தது. அதனால் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களும் அவர்களின் கற்றுக்கொடுக்கும் முறைகளும், மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.

வாசிப்பு பிழைகளை சமாளிக்கவும், தேர்வு எழுதும் திறனை மேம்படுத்தவும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தினர் பலவகையில் உதவி செய்தனர். ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் வழிகாட்டுதல் என்னை நிதானமாகவும், தேர்வுகளில் கவனம் செலுத்தவும் உதவியாக இருந்தது. கேள்விகளை எப்படி முறையாக அணுகுவது, என்பதை அங்குள்ள ஆசிரியர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தனர். மேலும், அவர்களிடம் உள்ள நிபுணத்துவம் எனது சோதனைத் திறனை மேம்படுத்தியது.

மாணவன் சூர்யா: நீட் 2023ல் நீங்கள் அகில இந்திய அளவில் 6வது இடம் பிடித்துள்ளேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு காரணம், எனது தந்தை ஒரு டாக்டர். அதனால் அந்த படிப்பில் சேர என்னை தூண்டினார். மக்கள் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்ததும், அவரின் பாதையில் செல்ல தூண்டியது. நான் 11ம் வகுப்பின் தொடக்கத்திலேயே ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அங்குள்ள ஆசிரியர்கள் மற்றவர்களைவிட வேறுபட்டவர்கள். மேலும், ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட பாடப் பொருட்கள் உயர் தரத்தில் இருந்தன. ஒரே ஒரு பாடத் தொகுதிக்கு பதிலாக, என்சிஇஆர்டி உள்ளிட்ட 2 முதல் 3 புத்தகங்களை கொடுத்தனர். அந்த புத்தகங்கள் உண்மையிலேயே நீட் தேர்வுக்கு உதவியாக இருந்ததை அறிந்தேன்.

நீட் தேர்வுக்கு தயாராக ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் பங்கு குறித்து கூறவேண்டும் என்றால், நீட் தேர்வில் நான் பங்கேற்க வைப்பதில் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் பங்கு குறிப்படத்தக்கது. ஆகாஷில் உள்ள புத்தகங்கள், ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் முக்கிய பங்கு வகித்தனர். வகுப்பில் சக மாணவர்களுடனான கலந்துரையாடல், மற்றும் விவாதங்கள் எனக்குள் ஒரு போட்டி மனப்பான்மையை வளர்த்தது. அதுவே நீட் தேர்வில் சிறப்பாக செயல்படும் நம்பிக்கையை அதிகரித்தது. நீட் தேர்வுக்கு என்சிஇஆர்டி புத்தகங்களை முழுமையாக படிப்பது முக்கியம். இந்த அம்சங்கள் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு முக்கியமாக இருந்தன. மேலும் 11ம் வகுப்பின் தொடக்கமே வெற்றிக்கான வலுவான அடித்தளத்தை அமைக்க உதவியாக இருக்கிறது.

The post ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் படித்து டாப் 10 இடங்களை பிடித்தது எப்படி? நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Akash Institute ,Chennai ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...