×

மாகேயில் வீரர்கள், சிறுவர்களுக்கு எம்டிஎம்ஏ போதை பொருள் சப்ளை

புதுச்சேரி, ஜூன் 21: மாகேயில் வீரர்கள், சிறுவர்களுக்கு எம்டிஎம்ஏ போதை பொருட்கள் சப்ளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் சரகத்துக்குட்பட்ட நெற்களம் வழியாக வடகொல்லி சாலையில் எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை மடக்கினர். அதில் ஒருவர் தப்பிஓடிவிட்ட நிலையில் மற்றொருவரை பிடித்து சோதனையிட்டனர். கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 52 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், பைக்கையும் கைப்பற்றினர். பின்னர் பிடிபட்ட விழுப்புரம், கீழ்பாதை, சொர்ணாவூரைச் சேர்ந்த சகாயகம் என்ற அரவிந்தராஜ் (22) என்பவரை கஞ்சா வழக்கில் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தப்பிஓடிய அவனது கூட்டாளியான அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் மாகேயில் வடக்கு பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் அருகே வீரர்களுக்கு, சிறுவர்களுக்கு, மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த மாகே, பராக்கல், தலே பராம்பாத்தைச் சேர்ந்த முகமது சவுமான் (20), கேரளாவின் தலச்சேரி, குறிச்சியில் பகுதியைச் சேர்ந்த விஷால் (33) இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,500 மதிப்பிலான 300 மில்லி கிராம் எம்டிஎம்ஏ (மெத்தலி டயாக்சி மெத்த அவிட்டமின்) டயாக்சைடு) போதை படவுர், செல்போன் மற்றும் 38 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post மாகேயில் வீரர்கள், சிறுவர்களுக்கு எம்டிஎம்ஏ போதை பொருள் சப்ளை appeared first on Dinakaran.

Tags : MDMA ,Magay ,Puducherry ,Mage ,Dinakaran ,
× RELATED சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!!