×

முதியவர் மாயம்

 

ஈரோடு, ஜூன் 21: ஈரோடு அடுத்துள்ள நாதகவுண்டன்பாளையம், ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (82). இவர் தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் கூறியுள்ளார். ஆனால் வயது முதிர்வு காரணமாக குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி சின்னப்பன் திடீரென்று மாயமானார். குடும்பத்தினர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று தேடி பார்த்தனர். இதே போல பல்வேறு இடங்களில் தேடியும் சின்னப்பன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் இளமுருகன் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Chinnappan ,Alankattuwalasu ,Nathakoundanpalayam ,
× RELATED தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு