×

விமான படை ஊழியர் தற்கொலை

சென்னை: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டைச் பகுதியை சேர்ந்தவர் அத்தீஸ்வரி (38). இவரது கணவர் வையாபுரி (43). இவர், இந்திய விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, பின் தென்னக ரயில்வே ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, மகன் சிவராஜ்குமார், மகள் திவ்யலட்சுமி ஆகியோருடன் வசித்துவந்தார். இந்நிலையில், வையாபுரி, நேற்றுமுன்தினம் காலை முதல் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, யாரிடமும் பேசாமல் அவரது அறையில் உறங்கச் சென்றவர் இரவு 7.30 மணிக்கு அவரது மகன் சாப்பிட கூப்பிடுவதற்காக, படுக்க அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால், சிவராஜ்குமார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

The post விமான படை ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ateeswari ,Muthaputuppet ,Avadi ,Vaiyapuri ,Indian Air Force ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை வழக்கு: சென்னை...