×

இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபடுவது தொடர்பாக ஒரு தனிப்பட்ட சமுதாயத்தினருக்கும், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில், கோயில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, மோதல் அபாயத்தை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(20ம் தேதி) காலை 11 மணிக்கு, திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்டாட்சியர் கௌசல்யா தலைமையில் இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மல்லசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள விசைத்தறி சங்கத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

 

The post இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Choeeswarar ,Aggurayaperumal ,Chellandiyamman ,
× RELATED ₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்