×

சாலை விபத்தில் இருவர் படுகாயம்

 

போடி, ஜூன் 20: போடி அம்மா குளத்தில் வசிப்பவர் நந்தகோபால். இவரது மகன் வெற்றிச்செல்வன் (49). இவர் போடி முந்தல் சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெற்றிச்செல்வன் வீட்டில் இருந்து தனது டீக்கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே அதிவேகமாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் டூவீலரில் வந்த போடியை சேர்ந்த அழகர்சாமி மகன் நவீன் குமார் (23) மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post சாலை விபத்தில் இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Nandagopal ,Amma Pond ,Vetrichelvan ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...