×

கள்ளக்காதலியை வெட்டிய வாலிபர்

மாதவரம்: கொடுங்கையூர் துர்கை அவென்யூ 5வது தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா(25). இவரது கணவர் வேலு. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து, வியாசர்பாடி பி.வி காலனி 25வது தெருவைச் சேர்ந்த ராஜி என்ற ராஜேஷ் (26) என்பவருடன் கவுசல்யா வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கவுசல்யாவின் முதல் கணவரான வேலுவும், ராஜேசும் புளியந்தோப்பு ஆடுதொட்டியில் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.

அப்போது ராஜேசை சரமாரியாக வேலு தாக்கியுள்ளார். இதையடுத்து கவுசல்யாவிடம் சென்ற ராஜேஷ் தகராறில் ஈடுபட்டு அவரை வெட்டியுள்ளார். இதில் கவுசல்யாவுக்கு கைகள் உள்பட உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலு தாக்கியதில் காயமடைந்த ராஜேசும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post கள்ளக்காதலியை வெட்டிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Mathavaram ,Kodungayur ,Durga Avenue 5th Street, Kowusalya ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...