×

போதையில் தோழியிடம் வாலிபர் சில்மிஷம் பைக்கில் இருக்கி அணைச்சு உம்மா…

தவளக்குப்பம், ஜூன் 20: புதுச்சேரி-கடலூர் சாலை மணவெளி சந்திப்பில் அரியாங்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக வந்தனர். மேலும், பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷம் செய்து கொண்டும் பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இதனையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம் அருங்கூர் அருகே உள்ள கீழக்கொல்லை பகுதியைச் சேர்ந்த வாலிபர் என்பதும், அவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

அவர்கள் புதுச்சேரிக்கு இன்ப சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சேட்டை செய்துள்ளனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போலீசாரை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி அவர்களது பெற்றோருக்கு போன் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அந்த வாலிபர் தன்னை அவமானபடுத்திவிட்டதாக கூறி அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதால் அரியாங்குப்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

The post போதையில் தோழியிடம் வாலிபர் சில்மிஷம் பைக்கில் இருக்கி அணைச்சு உம்மா… appeared first on Dinakaran.

Tags : Thavalakuppam ,Arianguppam ,Puducherry-Cudalur Road Manaveli junction ,
× RELATED அரியாங்குப்பத்தில் பயங்கரம் தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை