×

மாங்காடு அருகே பஸ் மோதி வாலிபர் பலி: டிரைவர் கைது

குன்றத்தூர்: மாங்காடு அருகே குமணன்சாவடி-குன்றத்தூர் சாலையோரத்தில் ஒரு வாலிபர் தலை நசுங்கி இறந்து கிடப்பதாக நேற்றிரவு மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வாலிபரின் சடலத்தை போரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்துபோன நபர் மாங்காடு, ஓம்சக்தி நகரை சேர்ந்த பிரசாத் (36) என்பதும், குமணன்சாவடி-குன்றத்தூர் சாலையோரத்தில் நின்றிருந்த தனியார் பேருந்து அருகே பிரசாத் தூங்கியுள்ளார். இதை கவனிக்காமல் தனியார் பேருந்தை டிரைவர் எடுத்தபோது, பிரசாத்தின் தலையில் பேருந்து ஏறி இறங்கியதில் பரிதாபமாக பலியானது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து டிரைவர் விக்னேஷ் (35) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post மாங்காடு அருகே பஸ் மோதி வாலிபர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kunradthur ,Kumananchavadi-Kunradthur road ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்திய...