×

சமயநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை

வாடிப்பட்டி, ஜூன் 18: சமயநல்லூர் காந்தி நகரை சேர்ந்த காமேஸ்வரன் மகன் தேவ்ஆனந்த் பாண்டியன் (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நண்பர்களுடன் விளையாட சென்ற மாணவரை வெயில் அதிகமாக இருப்பதால் வெளியில் செல்லக்கூடாது என தந்தை கூறியதாக தெரிகிறது. இதனால் மனவருத்தமடைந்த தேவ் ஆனந்த் பாண்டியன் கடந்த ஜூன் 30ம் தேதி வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்தார். உடனே பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவ் ஆனந்த் பாண்டியன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், எஸ்ஐ தியாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சமயநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Samayanallur ,Vadipatti ,Devanand Pandian ,Kameswaran ,Samayanallur Gandhi Nagar ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது