×

மொபட்டில் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

வேப்பூர், ஜூன் 18: மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையிலான போலீசார் மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக மொபட்டில் சென்ற இருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மொபட்டில் சோதனை நடத்தினர். அதில், 150 மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பைக்கில் வந்த இருவரும் கோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் பார்த்தசாரதி (20), நாராயணசாமி (60) என்பதும் இருவரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post மொபட்டில் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Veypur ,Mangalampet ,Sub-Inspector ,Rajarajan ,Madhubat ,Dinakaran ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்