×

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சத்தியமங்கலம்,ஜூன்18: புஞ்சை புளியம்பட்டி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். பு.புளியம்பட்டி டாணாபுதூரை சேர்ந்தவர் சம்பத்(42).அதே பகுதியில் பால் சேகரிப்பு மையம் நடத்தி வந்தார். இவர் நேற்று காலை தனது பைக்கில் பால் சேகரிப்பதற்காக டாணாபுதூரில் இருந்து, செல்லப்பம்பாளையம் நோக்கி கோவை சாலையில் சென்றார். கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருவதோடு, சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலை விபத்தில் உயிரிழந்த சம்பத்துக்கு சுகுணா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

The post சாலை விபத்தில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Satyamangalam ,Punjai Puyampati ,Pliyambatti Danapudur ,
× RELATED சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு