×

அமரர் ஊர்தி தராததால் இறந்த குழந்தையை பையில் போட்டு பஸ்சில் எடுத்து சென்ற பெற்றோர்

ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தின் திண்டோரி மாவட்டம் சஹாஜ்புரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜம்னி பாய் சஹாஜ்புரியிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால் தாயும், சேயும் ஜபல்பூர் அரசு மருத்துமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதையடுத்து ஜபல்பூரிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி ஜூன் 15ம் தேதி இறந்து விட்டது. குழந்தையின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரும்படி சுனில் தர்வே கேட்டுள்ளார். ஆனால் பணவசதி இல்லாத காரணத்தால் அமரர் ஊர்தி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுனில் தர்வே குழந்தையின் உடலை பையில் வைத்து வைத்து கொண்டு ஜபல்பூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டோரி மாவட்டத்துக்கு பயணிகள் பேருந்தில் சென்றுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post அமரர் ஊர்தி தராததால் இறந்த குழந்தையை பையில் போட்டு பஸ்சில் எடுத்து சென்ற பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Amarar ,Jabalpur ,Sunil Turve ,Sahajpuri ,Tindori district ,Madhya Pradesh ,Jamani Bai ,Sahajburi ,
× RELATED பாஜவிற்கு கமல்நாத் தேவையில்லை: ம.பி. அமைச்சர் கருத்து