×

சூளைமேட்டில் அழுகிய உடல் மீட்பு மத்திய உளவுத்துறை எஸ்ஐ மர்ம மரணம்

சென்னை: சூளைமேட்டில் மத்திய உளவுத்துறையில் பணியற்றி வந்த உதவிஆய்வாளர் ஒருவர் மர்மமான முறையில் வீட்டின் கழிவறையில் இறந்துகிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை சூளைமேடு ஆச்சிரியபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (55), மத்திய உளவுத்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது வீடு கடந்த 3 நாட்களாக திறக்கப்படவில்லை. அதேநேரம் வீட்டில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சூளைமேடு போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் உதவி ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரவீந்திரன் கழிவறையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் இறந்து கிடந்த வீடு முழுவதும் போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரவீந்திரன் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை  செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவீந்திரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவரது இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post சூளைமேட்டில் அழுகிய உடல் மீட்பு மத்திய உளவுத்துறை எஸ்ஐ மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Central Intelligence SI SI ,Sulaimed ,CHENNAI ,Central Intelligence Agency ,Choolaimet ,Central Intelligence SI ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...