×

திருமணமான 8 நாளில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி

கடலூர், ஜூன் 16: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் வழிசோதனைபாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் விமல் ராஜ் (25). இன்ஜினியர். இவருக்கும் சிதம்பரத்தை சேர்ந்த ரவீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 8ம் தேதி திருமணம் நடந்துள்ளது. விமல் ராஜ், பைபர் நெட் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூரில் இன்டர்நெட் இணைப்பை சரி செய்வதற்காக விமல் ராஜும், அவருடன் பணிபுரியும் மற்றொரு ஊழியரும் சென்றனர். அப்போது ஒரு தனியார் காம்ப்ளக்சின் மாடியில் கேபிளை இழுத்த போது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி விமல் ராஜ் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 நாட்களில் விமல் ராஜ் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. நீதி விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தை வி.சி கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இறந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, அவரது மனைவிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திலேயே வேலை வழங்க வலியுறுத்தப்பட்டது.

The post திருமணமான 8 நாளில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Tags : groom ,Cuddalore ,Thirupatrippulyur ,Day of Marriage ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை