×

₹30,000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் ராஜாராம் (64). இவரது மனைவி சந்திரவதி பெயரில் சுபா நகரில் 36 சென்ட் நிலம் உள்ளது. இதற்கு வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று கோரி சந்திரவதி, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். தடையில்லா சான்று வழங்க தாசில்தார் வசந்த மல்லிகா ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின்படி தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வசந்த மல்லிகாவிடம் ராஜாராம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரை கைது செய்தனர்.

The post ₹30,000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Rajaram ,Kovilpatti suba ,Tuticorin district ,Chandravati ,Suba Nagar ,Tahsildar ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!