×

பெரியபாளையம் அருகே கங்கையம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

பெரியபாளையம்: ஸ்ரீகங்கை அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமரப்பேட்டையை சேர்ந்த ராள்ளப்பாடி கிராமத்தில் ஸ்ரீகங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு ஜாத்திரை திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஏழு ஊர்களின் எல்லையை மிதிக்கும் நிகழ்ச்சியும்,பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பிரகாரப் புறப்பாடு வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதன் பின்னர் பம்பை, உடுக்கை, தாரை-தம்பட்டை முழங்க வான வேடிக்கையுடன் மேம்பாலம் வழியாக கரகம் ராள்ளப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் கும்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தெருக்கூத்து நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராள்ளப்பாடி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

The post பெரியபாளையம் அருகே கங்கையம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Gangaiyamman temple festival ,Periyapalayam ,Jatra festival ,Sri Ganga Amman temple ,Tiruvallur District ,Ellapuram Union ,Kumarappettai ,Gangaiyamman Temple Jatra Festival ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...