×

பொள்ளாச்சி அருகே தெலுங்குபாளையத்தில் நகை வியாபாரியிடம் ரூ. 1.27 கோடி கொள்ளையடித்த 6 பேர் கைது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தெலுங்குபாளையத்தில் நகை வியாபாரியிடம் ரூ. 1.27 கோடி கொள்ளையடித்த 6 பேர் கைது செய்துள்ளனர். கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளை வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ரூ.1 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் தருகிறோம், ரூ.85 லட்சம் திருப்பித் தந்தால் போதும் என்று கூறி மோசடி செய்துள்ளனர். நகை வியாபாரியிடம் பேசிய மர்மநபர்கள் வியாபாரியிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

The post பொள்ளாச்சி அருகே தெலுங்குபாளையத்தில் நகை வியாபாரியிடம் ரூ. 1.27 கோடி கொள்ளையடித்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Telangupalayam ,Pollachi ,Dinakaran ,
× RELATED பராமரிப்பின்றி உதவி கேட்டு பெண், மாற்று திறனாளி கலெக்டரிடம் மனு