×

வாகனம் மோதி வாலிபர் பலி

 

திருப்புத்தூர், ஜூன் 9: திருப்புத்தூர் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோஷ்டியூர் அருகே ரோட்டின் ஓரத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். விசாரானையில், இறந்து கிடந்தவர் சிவகங்கை அருகே உள்ள இடையமேலூரைச் சோந்த சந்திரன் மகன் தினேஷ்(34) என்றுதெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
படுகாயமடைந்து இறந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Tiruputhur Sivagangai National Highway ,Tirukoshtiyur ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது