×

மதுரை மருத்துவக்கல்லூரிக்கு இறந்தவர் உடல் தானம்

 

மதுரை, ஜூன்7: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி உடற்கூறு கழகத்திற்கு மருத்துவ மாணவர்கள் கல்விக்காக இயற்கையான முறையில் இறந்தவரின் உடல், குடும்பத்தார் ஒப்புதலின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் பலர் தங்களது உடலை தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பெற்றோர் சம்மதம் பேரில் விண்ணப்பித்து பதிவு செய்கின்றனர். இந்நிலையில் மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் நேற்று முன் தினம் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தகவல் அறிந்து வந்து உடலை மீட்டு விசாரித்தனர்.

இதில் அந்த நபர் பிருத்திராஜ்(62), உறவினர்கள் யாரும் இல்லாததால் அப்பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். மேலும் திருமணமாகாத பிருத்திராஜூக்கு, சகோதரி ஒருவர் உள்ளார் என்றும், அவ்வப்போது அண்ணாநகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு பிருத்திராஜ் சென்று வருவார் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து தகவல் தெரிந்து அங்கு வந்த சுசீலாதேவி தனது சகோதரர் உடலை மாணவர்கள் கல்விக்காக மதுரை மருத்துவக்கல்லூரிக்கு உடல் தானம் செய்ய விரும்பினார். இதையடுத்து சுசீலாதேவி ஒப்புதலின் பேரில் பிருத்திராஜ் உடல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

The post மதுரை மருத்துவக்கல்லூரிக்கு இறந்தவர் உடல் தானம் appeared first on Dinakaran.

Tags : Madurai Medical College ,Madurai ,Madurai Government Medical College Anatomy Institute ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை