திருமலை: திருப்பதி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால், ஏசி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதல் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் பக்தர்கள் தப்பினர். திருப்பதி மலைப்பாதையில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்த பக்தர்களுடன் திருமலையில் இருந்து திருப்பதி நோக்கி ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் எலக்ட்ரிக் ஏசி நேற்று காலை வந்து கொண்டிருந்தது. மலைப்பாதையில் 28வது வளைவில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்த திருமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான காயங்களுடன் இருந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ்சின் டிரைவர் கூறுகையில், ‘திடீரென பிரேக் பிடிக்காததால் வலது பக்கமாக பஸ்சை திருப்ப முயன்றும், இடது பக்கமாக இழுத்து சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ’ என்றார்.
The post பிரேக் பிடிக்காததால் விபத்து; திருப்பதி மலைப்பாதையில் கவிழ்ந்த எலக்ட்ரிக் பஸ்: காயங்களுடன் தப்பிய பக்தர்கள் appeared first on Dinakaran.

