×

திருவாளந்துறையில் 30ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

 

பெரம்பலூர், மே 24: வே ப்பந்தட்டை தாலுக்கா, திருவாளந்துறை கிராமத்தில் வருகிற 30ம் தேதிமாவட்டக் கலெக்டர் கற்பகம் தலை மையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள் ளது. இதுகுறித்து கலெக்டர் தெரிவித்திருப்பதாவது : திருவாளந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரா மங்களைச் சேர்ந்த பொது மக்கள் முன்னதாகவே மனு க்களை அளித்து பயனடை யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள்.

மக்கள் தொட ர்புத்திட்ட முகாமிற்கு முன் னதாக பொது சுகாதாரத்து றையின் சார்பில் மருத்துவ முகாம் இன்று 24ம்தேதி) (புதன் கிழமை) அன்றும், கால்நடை பராமரிப்புத் து றை சார்பில் கால்நடைகளு க்கான மருத்துவ முகாம் 25ம்தேதி வியாழக்கிழமை யும் நடைபெறவுள்ளது. எனவே, மக்கள் தொடர்புத் திட்ட முகாமினை சம்பந்த ப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post திருவாளந்துறையில் 30ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : People's Relations Project Camp ,Thiruvalanduram ,Perambalur ,Thiruvalandurai ,Vay ,Pantattatta Thaluka ,The People's Communication Project Camp ,Thiruvandura ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...