×

ஜல்லிக்கட்டு வழக்குகளை திரும்ப பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: ஜல்லிக்கட்டு வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைவருக்கும் மன மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக, கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் 2017ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள்மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறவும், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ஜல்லிக்கட்டு வழக்குகளை திரும்ப பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,O. Pannerselvam ,Chennai ,Jallikkutu ,Pannier ,CM ,O. Bannir ,JALLICKATI ,O. ,Bannerselvam ,
× RELATED மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா...