×

கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் குத்து சண்டை மைதானம் அமைக்க அனுமதி: மேயர் பிரியா தகவல்

சென்னை, மே 20: சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்குட்பட்ட கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது குறித்து மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த விளையாட்டுத் திடல் 17,658 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 6,187 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் குத்துச் சண்டை மைதானம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11,470 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபாதை, கழிப்பறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது. இங்குள்ள பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடக் கட்டிடத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தி, புதிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார். இந்த ஆய்வின் போது, கவுன்சிலர் நந்தினி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் குத்து சண்டை மைதானம் அமைக்க அனுமதி: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Gopalapuram Municipal Corporation ,Mayor Priya ,Chennai ,Chennai Corporation ,Kopalapuram Municipal Corporation ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...