- மாதர்
- சங்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பேரவை
- அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்
- ஆர்.கே. நினைவிடம்
- மாதர் சங்க சிறப்பு பேரவை கூட்டம்
- தின மலர்
புதுக்கோட்டை,மே19: அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் புதுக்கோட்டை ஆர்.கே.நினைவகத்தில் நேற்று நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். எதிர்கால திட்டமும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர் சுசீலா, ‘உறுப்பினர் பதிவும் சங்க விரிவாக்கமும்’ என்ற தலைப்பில் மாவட்ட துணை தலைவர் சலோமி ஆகியோர் உரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் கவிதா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வைகைராணி நன்றி கூறினார். பேரவையில் நிர்வாகிகள் சாந்தி, மகாலெட்சுமி, முத்துமாரி, சோபனா, இந்திராணி, மதியரசி, நித்யா, நாகூரம்மாள் உள்ளி ட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
The post புதுக்கோட்டையில் மாதர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் appeared first on Dinakaran.