கோவை, மே 19: கோவை அரசு பொருட்காட்சி வியாபாரிகள் கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதான பகுதியில் அரசு பொருட்காட்சி போடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று துவங்கப்பட்ட இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பொருட்காட்சியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இடம் சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் கிடைக்கவில்லை.
அதனால் அதிகாரிகள் கூறிய வேறு இடத்தில் கடைகளை அமைத்தோம். இந்நிலையில் தற்போது அதிகாரிகள் அரசு தரப்பில் எவ்வித முறையான கடிதமும் வழங்காமல் அக்கடைகளை எல்லாம் அகற்ற கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் ஏற்கனவே எங்களுக்கு ஒதுக்கிய இடத்தை சுத்தம் செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post அரசு பொருட்காட்சி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.