பவானி,மே19: அம்மாபேட்டை பேரூராட்சி,4வது வார்டு, எம்ஜிஆர் நகர், 6-வது வார்டு பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மின் மோட்டார் வைத்து சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டது.
இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம், குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், சின்னப்பன் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post அம்மாபேட்டை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு ஆழ்குழாய் கிணறு, குடிநீர் தொட்டி அமைப்பு appeared first on Dinakaran.