×

திருமணத்தன்று விஷம் குடித்த மணமகன் பரிதாப சாவு; மணமகள் கவலைக்கிடம்: இந்தூரில் சோகம்

இந்தூர்: இந்தூரில் திருமணத்தன்று விஷம் குடித்த மணமகன் பரிதாபமாக இறந்தார். மணமகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இளம்பெண்ணுக்கும், வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இந்நிலையில், மணமக்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகன் (21) பரிதாபமாக உயிரிழந்தார். மணமகள் (20) கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், கடந்த பல நாட்களாக மணமகள், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மணமகன், தனது தொழில் காரணமாக திருமணத்திற்கு 2 ஆண்டுகள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளார். அதை ஏற்க மறுத்த மணமகள், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திருமணத்தன்று மணமகன் விஷம் குடித்துள்ளார். இந்த தகவலை மணமகளிடம் கூறியுள்ளார். உடனே மணமகளும் விஷம் குடித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மணமகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில் மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணத்தன்று விஷம் குடித்த மணமகன் பரிதாப சாவு; மணமகள் கவலைக்கிடம்: இந்தூரில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Pathapa Sawu ,Indore ,Pathaba Sawu ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!