×

கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவத்தில் 2 கொள்ளையர்கள் கைது..!!

கோவை: கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவத்தில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களை கண்காணிப்பு பட காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வந்தனர். பீளமேடு பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவர் நடைப்பயிற்சி சென்றபோது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கவுசல்யா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். தங்க சங்கிலியை அழுத்தமாக அவர் பிடித்துக் கொண்டதால் காரில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியான 24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் 2 பேரையும் சிங்காநல்லூர் போலீஸார் கைது செய்தனர். செயினை பறிக்க முயன்றவர் சக்திவேல் என்பதும் காரை ஓட்டி வந்தவர் அபிஷேக் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஆணையர் சண்முகம், குற்றவாளிகள் மீது ஏற்கனவே செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது. ஒருவர் கால் டாக்சியிலும், மற்றொருவர் ஸ்விகியிலும் பணியாற்றுபவர்கள். இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதால் காரில் வந்து நகை பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளனர் என கூறினார்.

The post கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவத்தில் 2 கொள்ளையர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Govai ,Khova ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை