![]()
சென்னை: மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்தனர். ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவையாகவும் நடித்தனர். இருவரின் நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. அடுத்து த்ரிஷா அஜீத்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் இந்த படத்தில் இணைகிறார்.
விடா முயற்சியில் அஜீத் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதால் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவருகிறது. த்ரிஷா ஏற்கெனவே அஜீத்துடன் மங்காத்தா, என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மீண்டும் இணையும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய்? appeared first on Dinakaran.
