- சுவாமிமலை
- சுவாமிநாத சுவாமி கோயில்
- தஞ்சாவூர்
- சுவாமிநாதர்
- சுவாமி
- கோவில்
- அருப்பா
- அய்யனார் சுவாமிநாதசுவாமி கோயில்
தஞ்சாவூர், மே 11: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ரூ.38 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.இந்து சமய அறநிலையத்துறை கோயில் உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர் உமா தேவி, கோயில் கண்காணிப்பாளர் பழனிவேல் கும்பகோணம் ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்களும், தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி மாணவிகளும், கோயில் பணியாளர்களும் கோயிலில் உள்ள 12 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.38 லட்சத்து 42 ஆயிரத்து 296 பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 96 கிராம் தங்கம், 3 கிலோ 315 கிராம் வெள்ளி, வெளி நாட்டு நாணயங்கள் 126 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் 2 மாதம் கழித்து நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ரூ.38 லட்சம் பக்தர்கள் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.