×

அறநிலையத்துறையின் சார்பில் ரூ.30.43 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆணையர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: அறநிலையத்துறையின் சார்பில் ரூ.30.43 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஆணையர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், அறநிலையத்துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 30 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் வரிசை வளாகம், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் கோயிலில் திருமண மண்டபம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் முதன்முறையாக ஒப்பந்த காலத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடமானது, மூன்று தளங்களுடன், 33,202 சதுரடி பரப்பளவில், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர்களின் அறைகள், தலைமைப் பொறியாளரின் அறை, இணை ஆணையர்களின் அறைகள், உதவி ஆணையர்களின் அறைகள், திருப்பணி பிரிவு, பொறியியல் பிரிவு, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் கோயிலில் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், கோயில் வரிசை வளாகத்தில் 4 நுழைவு மண்டபங்கள், 4 அவரசகால வழிகள், காத்திருப்பு கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள், கோயில் பயன்பாட்டிற்கான கடைகள், மருத்துவ மையம், கட்டண சீட்டு விற்பனை மையம், பிரசாத விற்பனை நிலையம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் கோயிலில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அறநிலையத்துறையின் சார்பில் ரூ.30.43 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆணையர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Office of the Governor with Modern Facilities ,Department ,Chief Minister ,BC ,G.K. Stalin ,Chennai ,Chief Minister of the Chief Minister ,Office of the Governor ,Department: ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை...