×

வெங்ககல்பட்டியில் மேம்பால சுவர் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் மணற்பரப்பு

 

கரூர்: கரூரில் இருந்து திண்டுக்கல், பாளையம், வெள்ளியணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தாந்தோணிமலை, வெங்ககல்பட்டி அருகேயுள்ள மேம்பாலத்தின் வழியாக சென்று வருகிறது. தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக வெங்ககல்பட்டி மேம்பால சுவரையொட்டி அதிகளவு மணல் பரவியுள்ளது. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த மணற்பரப்புகளை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த மணற்பரப்பை சுத்தம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெங்ககல்பட்டியில் மேம்பால சுவர் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் மணற்பரப்பு appeared first on Dinakaran.

Tags : Venkakalpatti ,Karur ,Dindigul ,Palayam ,Vellianai ,Thanthonimalai ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு