×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தி கிரசன்ட் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை

உத்தமபாளையம், மே 10: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். உத்தமபாளையம், பேருந்து நிலையம் அருகே உத்தமபாளையம், உத்தமபாளையம் தி கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் இந்த பள்ளியில், பயின்ற பள்ளி மாணவியான சப்ரா 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதல் இடத்தையும், மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இப்பள்ளி மாணவர், முகமது அப்துல் ஹமீது 600 க்கு 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி பர்ஹானா பேகம் 600 க்கு 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மற்றும் சேர்மன் இன்ஜினியர் முகமது சுல்தான், பள்ளி தாளாளர் முகமது அபூபக்கர் சித்திக் பள்ளி மேலாளர் சாகுல் ஹமீது ஆகியோரும் பள்ளியின் முதல்வர் டாக்டர் முகமது சாலி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் வாழ்த்தினார். மேலும் சாதனை பெற்ற மாணவ மாணவியருக்கு நினைவு பரிசுகளும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் தி கிரசன்ட் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Crescent Matric School ,Uttamapalayam ,The Crescent Matric Higher Secondary School ,The Crescent Matric School ,Dinakaran ,
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி